மகளிர் தினம்
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 8, 2007
மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. Blank noise project என்னும் அமைப்பு போன வருடம் Blog-a-thon என்று, தெருக்களில் பெண்களுக்கு நடக்கும் இழிசெயல்களுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு எல்லா பெண் வலைப் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்தது. குரலெலுப்பிய பெண்கள் மற்றும் சில ஆண்களுமான பட்டியல் இங்கு கிடைக்கும். இந்த வருடம் இன்னொருபடி முன்னேறி தானும் நடவடிக்கை எடுத்து மற்ற்வர்களுக்கும் முன்னோடியாக இருக்கும்படி ஊக்குவிக்கிறார்கள். இதுவரை உள்ள ஹீரோக்களின் பட்டியல். என் ஹீரோ இங்கே, இங்கே மற்றும் இங்கே
தமிழ் வலைப் பதிவுலகில் படைப்புகளை அனுப்பச் சொல்லி பூங்கா கேட்டிருக்கிறது. அடுத்த இதழில் தொகுத்து வெளியிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.