சினிமா – ஒரு வித்தியாசமான பிரித்தாய்வு
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 16, 2008
தசாவதாரம் விமர்சனங்களை தேடிப் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது இந்த விமர்சனத்தைப் படித்தேன். இந்தப் பதிவின் முற்பகுதி சினிமாவின் அனுகுமுறையை (cinematic technique) பிரித்தாய்ந்து எழுதியிருந்தது. படிப்பதற்குச் சுவையாக இருந்ததால் அதற்கான சுட்டியைத் தருகிறேன்.
பொதுவாக சினிமா என்பது இயக்குநரின் பார்வையில் விரிவது. இதில் பார்வையாளனின் பங்கு என்பது இயக்குநரின் பார்வை வழியே மட்டுமே பயணிக்க நிர்பந்திக்கப்படுவது. ஒரு பரந்த நிலப்பரப்பில் எந்த இடத்தை பார்க்க வேண்டும் என்பதை காமிரா கோணங்களே தீர்மானிக்கின்றன. மேலே படிக்க >>
மற்றபடி தசாவதாரத்தைப் பற்றி அவர் என்ன எழுதியிரக்கிறார் என்பதை நான் இன்னும் படிக்கவில்லை.
பிரேமலதா சொன்னார்
விசிட்டர், நீங்க படம் பார்த்தாச்சா இல்லையா?
The Visitor சொன்னார்
ம்ஹும். இன்னும் பாக்கல.
பிரேமலதா சொன்னார்
முதல்ல பாருங்க. நானும் படம் நல்லால்லன்னு சொன்னவங்களையெல்லாம் ரஜினி ரசிகர்கள்னுதான் நினைச்சேன், நானே படம் பார்க்கிறவரைக்கும்.